Home » 2014 » October » 19 » ஜெயலலிதாவை காண துடிக்கும் தொண்டர்கள்
1:26 PM
ஜெயலலிதாவை காண துடிக்கும் தொண்டர்கள்

அதிமுக பொதுச்செயலாலளர் ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையாகி வந்ததையடுத்து அவரை காண நேற்று அதிமுக தொண்டர்கள் அலைமோதினர்.இன்றும் கூட வெளியூரில் இருந்து வந்துள்ள அதிமுக தொண்டர்கள் மழையை பொருட்படுத்தாமல் போயன் கார்டன் பகுதியில் குவிந்துக்கொண்டிருக்கின்றனர்.

18 ஆண்டுகள் கடந்த கடந்த மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதாவின் மீது சுப்பிரமணிய சுவாமி கொடுத்த சொத்துகுவிப்பு வழக்கின் பேரில் அவர் சிறை சென்றார்.இதனால் அவரது முதல்வர் பதவியும்,எம்.எல்.ஏ பதவியும் பறிபோனது.அதை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவோடு,ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்தனர்.ஆனால் நீதிபதி சந்திரசேகரா கடந்த 7ஆம் தேதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

                              இதை தொடர்ந்து ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் ஜெயலலிதா தரப்பினர்.17ஆம் தேதி ஜாமீன் மனு விசாரனைக்கு வர எவ்வித நிபந்தனையும் இன்றி,இடைக்கால ஜாமீனை நீதிபதி வழங்கினார்.அந்த நகல் நேற்று சிறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட,ஜெயலலிதா வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: 437 | Added by: NI | Rating: 0.0/0
Total comments: 0
avatar