Home » 2014 » October » 20

உத்திரபிரதேச கவர்னர் ராம்நாயக் பாஜகவின் கைபாவை என்று கூறுகிறார் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்.தன் அரசை கலைத்து,பாஜகவை அங்கு நிலைநிறுத்த மோடி திட்டமிட்டுள்ளதாகவும்,அதனால் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது.ஆனாலும் தேர்தலில் தன் கட்சி தான் வென்றது என்று கூறியுள்ள அவர்,தன் மீது எல்லா பழிகளையும் சுமத்திபார்த்த மோடி தற்போது கவர்னர் ராம்நாயக் மூலம் அதை நிறைவேற்ற நினைக்கிறார் என்று வெளிப்படையாக மீடியாக்களுக்கு தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

Views: 649 | Added by: NI | Date: 2014-10-20 | Comments (0)

2001-2006 அதிமுக ஆட்சி காலத்தில் யாருமே நெருங்க முடியாத வீரப்பனை சுட்டு கொன்றனர் தமிழக போலீஸ்.இதனால் தமிழக போலீசுக்கு மத்திய அரசே பாராட்டு தெரிவித்தது.வீரப்பன் இறந்ததை உறுதிப்படுத்திய பின் போலீசாருக்கு உயர்பதவி உட்பட அனைத்து உதவிகளும் அரசால் செய்து தரப்பட்டது.இந்நிலையில் வீரப்பனின் மனைவி இன்று பத்திரிக்கையாளர்களிடம் வீரப்பனுக்கு நினைவு மணி மண்டபம் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Views: 641 | Added by: NI | Date: 2014-10-20 | Comments (0)

கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானியர்களின் அத்துமீறல் அதிகரித்துவருகிறது.மேலும் அவர்கள் இந்தியர்கள் மீதும் துப்பாகிச்சூடு நடத்தி வருகின்றனர்.இதனால் கடந்த வாரம் மட்டும் காஷ்மீர் பகுதியில் 27 இந்தியர்கள் இறந்தனர்.

                            இதை பற்றி மத்திய அரசு என்ன கவனிக்கிறது என்று பார்த்தால் வெறும் பேச்சுதான் மத்திய அரசிடம் இருந்து வருகிறது.பதில் தாக்குதல் என்பது குறைவாகவே உள்ளது.இன்று அதிகாலை மீண்டும் பாகிஸ்தானியர்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டனர்.ஆனால் இதை எல்லாம் பார்த்தும் பார்க்காததை போல பிரதமர் மோடி,இந்தியா மருத்துவ துறையில் பின்தங்கி இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி  42-வது பட்டமளிப்பு விழாவில் பேசினார்.துளியும் கூட பாகிஸ்தானியர்களின் அத்துமீறல் பற்றி பேசவில்லை.பத்திரிக்கையாளர்கள் இதை பற்றி கேட்க வந்தபோதும்கூட,அவரது பாதுகாவலர்கள் அவரை நெருங்கவிடவே இல்லை.

 

எய்ம்ஸ் ... Read more »

Views: 662 | Added by: NI | Date: 2014-10-20 | Comments (0)

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள சங்கராச்சாரியார்,தலீத் இனத்தவர்களை,கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என்று தெரிவித்திருந்தார்.இதுவரை இதற்க்கு எதிர்ப்பு வராத நேரத்தில் அம்மாநில பாஜகவினர் அதற்க்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அம்மாநில பாஜக தலைவர் ஒருவர் பத்திரிக்கைகளுக்கு கொடுத்த பேட்டியில்,

''ஹிந்துக்களுக்கும்,பிராமனர்களுக்கும்தான் கோவிலில் அனுமதி கொடுக்கவேண்டும்.தலீத் இனத்தவர்களுக்கு கோவிலில் அனுமதி மறுக்கப்படவேண்டும்.சங்கராச்சாரியார் அவர்கள் தெரிவித்ததை நாங்கள் ஏற்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

Views: 735 | Added by: NI | Date: 2014-10-20 | Comments (0)

முன்னால் நடிகர் மற்றும் மூத்த பத்திரிக்கையாளரான திரு.சோ ராமசாமி அவர்களை விரைவில் ஜெயலலிதா சந்திக்க உள்ளார் என்று தெரிகிறது.தான் சிறையில் இருந்தபோது,தனக்கு ஆதரவாக இருந்தமைக்கு நன்றி தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Views: 891 | Added by: NI | Date: 2014-10-20 | Comments (0)

மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பறி,தனிபெரும் கட்சியாக பாஜக உள்ளது.இந்நிலையில் நேற்று 10 நிமிடங்கள் மொபைலில் உத்தவ் தாக்கரேவிடம்,அமித் ஷா பேசியுள்ளார்.மேலும் மராட்டிய பாஜக,சிவசேனா கூட்டனி உறுதி என்று தெரிவித்து வருகிறது.தேசியவாத காங்கிரஸ்,வெளியில் இருந்து ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளது.ஆனால் இந்த ஆதரவை ஏற்பது பற்றி பாஜக இன்னும் முடிவெடுக்கவில்லை.இன்று அதைபற்றிய முடிவு எடுக்க உள்ளனர்.ஆனால் தேசிவாத காங்கிரஸின் ஆதரவு தேவையற்றது என்று தெரிவித்து வருகின்றனர்.

Views: 565 | Added by: NI | Date: 2014-10-20 | Comments (0)