ஹரியானா முதல்வர் ஹூடா தன் பதவியை ராஜினாமா செய்தார்.கவர்னர் மாளிகை வந்த அவர் அடுத்து பாஜக அரசு அமையவுள்ளதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை கொடுக்க,கவர்னர் அதை ஏற்றுக்கொண்டார். |
மராட்டிய மாநில தேர்தல் கடந்த 13ஆம் தேதி நடந்தது.இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.இதில் பாஜக 120 இடங்களுக்கு மேல் கைப்பற்றியுள்ளது.இந்நிலையில் பாஜகவுக்கு தனிபெரும் கட்சி என்ற அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதேபோல சிவசேனாவும்,மாநில மக்களின் நலன் கருதி பாஜக கூட்டனியில் இணைய முன்வந்துள்ளதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.ஆனாலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது.இதனால் 122+63+41 என்று 226 எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு ஆட்சி அமைக்கிறது பாஜக.அதேவேளையில் துனை முதலமைச்சர் என்ற பதவியை உருவாக்கி உத்தவ் தாக்கரேவுக்கு கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
மதுரை மாவட்டம் திருமங்களத்தில் ஆசிட் வீச்சு விவகாரத்தால் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு 10 நிபந்தனைகளை தமிழக அரசுக்கு நியூஸ் இந்தியை வைத்தது.அவை,
|
ஜெயலலிதாவுக்கு சற்று நேரத்துக்கு முன்பு போன் செய்த மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி,''வழக்குகளில் இருந்து வெளிவந்து,சோதனைகளை தாண்டி மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்கவேண்டும்'' என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,''சோதனைகளை சாதனைகளாக மாற்றும் தன்மை கொண்ட தாங்கள்,இதுபோன்ற சின்ன சின்ன சோதனைகளை தாண்டி,வெற்றிபடிகளில் ஏறி,மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கவேண்டும்'' என்று தெரிவித்துள்ளார் |
மேற்கிந்திய தீவுகள் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்தது.ஆரம்பம் முதலே மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் போர்டுடனான பிரச்சனையில் மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் போட்டியை புறக்கணிப்பர் என்று கூறப்பட்டது.இந்நிலையில் தர்மசாலா போட்டியின் போது இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரை முடித்துக்கொள்வதாக அறிவித்தார் அந்த அணியின் பொறுப்பாளர். இந்த அதிர்ச்சியை எப்படி சமாளிப்பது என்பதை யோசித்த இந்திய கிரிக்கெ ... Read more » |
அதிமுக பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதாவை விரைவில் காங்கிரஸை சேர்ந்த ஜி.கே.வாசன் சந்திக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இந்த சந்திப்புக்கு ஜெயலலிதா தரப்பிலும் சம்மதம் அளிக்கப்பட்டதால் விரைவில் இந்த சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
காஷ்மீர் பாகிஸ்தான் நாட்டுக்கு தான் சொந்தம்.அதை நான் மீட்டெடுத்து பாகிஸ்தான் மக்களோடு நமது இஸ்லாமிய இணத்தினரை இணைத்து காட்டுவேன்.அதுவரை பொருமை காக்கவும்.என்னால் மோடி பயந்துபோய் உள்ளார்.நான் விடுக்கும் இரண்டாவது எச்சரிக்கை இது.அடுத்த முறை எச்சரிக்கை விடப்போவது இல்லை.போர் தொடுப்பேன்.அதில் வென்று காஷ்மீரை மீட்டெடுப்பேன் என பிலாவல் புட்டோ தெரிவித்துள்ளார். |
அதிமுக பொதுச்செயலாலளர் ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையாகி வந்ததையடுத்து அவரை காண நேற்று அதிமுக தொண்டர்கள் அலைமோதினர்.இன்றும் கூட வெளியூரில் இருந்து வந்துள்ள அதிமுக தொண்டர்கள் மழையை பொருட்படுத்தாமல் போயன் கார்டன் பகுதியில் குவிந்துக்கொண்டிருக்கின்றனர். 18 ஆண்டுகள் கடந்த கடந்த மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதாவின் மீது சுப்பிரமணிய சுவாமி கொடுத்த சொத்துகுவிப்பு வழக்கின் பேரில் அவர் சிறை சென்றார்.இதனால் அவரது முதல்வர் பதவியும்,எம்.எல்.ஏ பதவியும் பறிபோனது.அதை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவோடு,ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்தனர்.ஆனால் நீதிபதி சந்திரசேகரா கடந்த 7ஆம் தேதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதை தொடர்ந்து ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் ஜெயலலிதா தரப்பினர்.17ஆம் தேதி ஜாமீன் மனு விசாரனைக்கு வர ... Read more » |
மஹாராஷ்டிரா பாஜக - 112 இடங்கள் முன்னிலை காங்கிரஸ் - 46 இடங்கள் முன்னிலை சிவசேனா - 66 இடங்கள் முன்னிலை தே.வா.காங்கிரஸ் - 44 இடங்களை முன்னிலை
ஹரியானா பாஜக - 52 இடங்கள் முன்னிலை காங்கிரஸ் - 12 இடங்கள் முன்னிலை இந்திய தேசிய லோக் தளம் - 17 இடங்கள் முன்னிலை |
மஹாராஷ்டிராவில் 120 இடங்கள் வரை பாஜக கைப்பற்றும் என்பது உறுதியாகியுள்ள நிலை தற்போது காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டனி வைப்பது உறுதியாகியுள்ளது.அதேவேளையில் முதல்வர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையில் இருக்கும் சிவசேனாவுக்கும் - பாஜகவுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.காங்கிரஸ்,சிவசேனா வந்தால் முதலவர் பதவியை விட்டு தருவதாக கூறுவதால் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தியுள்ளது பாஜக |