Home » 2014 » October » 19 » இன்னும் 2 மணி நேரத்தில் முடிவாகிறது பாஜக-சிவசேனா கூட்டனி ??
7:37 PM
இன்னும் 2 மணி நேரத்தில் முடிவாகிறது பாஜக-சிவசேனா கூட்டனி ??

பாஜக - சிவசேனா கட்சிகள் தங்கள் 25 ஆண்டுகால கூட்டனியை மராட்டிய மாநில தேர்தலுக்காக உடைத்தனர்.இதனால் 5 முனை போட்டி நிலவியது.வாக்குகள் சிதறும் என்று எதிர்பார்த்ததை போல சுயேட்சைகள் 18 பேர் தேர்வாகியுள்ளனர்.தற்போது பாஜகவுக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக அறிவித்ததால் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

                                         அதேவேளையில் எதிரி கட்சியின் ஆதரவை மட்டுமே நம்பி ஆட்சி அமைக்க முடியாது என்பதால் சிவசேனாவிடம் பேசிவருகிறது பாஜக.ஆனால் சிவசேனா கட்சியை சேர்ந்த உத்தவ் தாக்கரே,பாஜக இதுவரை கூட்டனி பேச வரவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.அதேவேளையில் கூட்டனி பேச வந்தால் துனை முதலமைச்சர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே வைப்போம்.பாஜக ஒப்புக்கொள்ள முடியாது என்றால் காங்கிரஸூக்கு எங்களது ஆதரவை தெரிவிப்போம் என்றார்.இந்நிலையில் தற்போது அமித் ஷா சார்பாக 15 பேர் உத்தவ் தாக்கரேவை காண வந்துள்ளனர்.இதனால் 2 மணி நேரத்தில் கூட்டனி முடிவாகும் என்று தெரிகிறது,

Views: 644 | Added by: NI | Rating: 0.0/0
Total comments: 0
avatar